• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயிலில் இனி பெட்ஷீட்டுக்கு முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சி., அறிவிப்பு

April 24, 2017 தண்டோரா குழு

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்தியாவில் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருவதால் ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து செய்து வருகிறது. அதன்படி ஏசி வகுப்பு அல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் சொகுசாக பயணிக்கும் வகையில் பெட்ஷீட், கம்பளி தலையணை போன்றவற்றை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ரயில்வேயின் www.irctc.co.in எனும் இணையதளத்தில், பயணிகள் முன்பதிவு செய்யும் போதே உணவுப்பொருளும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது மட்டுமின்றி ஏசி அல்லாத பிறவகுப்பில் பயணிப்பவர்கள் ரூ.650யை செலுத்தி பெட்- ரோல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதைபோல், ரூ.450ஐ செலுத்தி பெட்ஷீட், தலையணை, மெத்தை விரிப்பு போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க