• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றோரிடம் டெல்லி போலீசார் ஒப்படைப்பு

February 7, 2018 தண்டோரா குழு

டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றோரிடம் டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரது மகன் சரத்பிரபு.இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் கீழ் உள்ள யுசிஎம்ஸ் கல்லூரியில் எம்.டி மருத்துவ படிப்பினை படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த(ஜன 17)ம் தேதி காலையில் அவர் தனது விடுதி அறையில் பிணமாக இருந்துள்ளார்.இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த கல்லூரியினர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்த அங்கு சென்ற சரத்பிரபுவின் தந்தை அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதை தெரிவித்ததையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை டெல்லி விமான நிலையத்திலிருந்து கோவை வழியாக திருப்பூர் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சரத்பிரபுவின் தந்தை சரத்பிரபுவின் உடலில் கழுத்து,தலை மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும்,இதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி முறையிட்டார்.இந்நிலையில் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றோரிடம் டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க