• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி சத்யராஜுக்காக குரல் கொடுக்காதது ஏன்?.. அமைச்சர் வேலுமணி கேள்வி

May 20, 2017 தண்டோரா குழு

காவிரி பிரச்சனை குறித்து பேசியதற்காக சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் தடுத்த போது அவருக்காக ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் சிஸ்டம் கெட்டுப் போச்சு பேச்சு எனக் கூறியது பலவிதமான விவாதங்களையும், சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது,”காவிரிப் பிரச்சினையின்போது அனைவருமே மாநில நலனுக்காக குரல் கொடுத்தோம். அரசும் கொடுத்தது, கட்சிகளும் கொடுத்தன.அதேபோல நடிகர் சத்யராஜும் குரல் கொடுத்தார். அந்த விவகாரத்தில் அனைவருமே தமிழகத்தின் உரிமைக்காகத்தான் குரல் கொடுத்தோம். கர்நாடகத்தைக் கண்டித்தோம். அதேபோலத்தான் சத்யராஜும் குரல் கொடுத்திருந்தார். ஆனால் அவர் நடித்த பாகுபலி படம் வெளியாக விடாமல் கர்நாடகத்தில் தடுத்தனர்.

கர்நாடகத்தில் சத்யராஜுக்காக போராட்டம் நடத்தி அவரை கண்டித்தனர். அப்போது சத்யராஜுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும் ஏன் கொடுக்கவில்லை என்றார்.

மேலும், தமிழகத்தில் வட மாநிலங்களை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இங்கு சிஸ்டம் எல்லாம் கெடவில்லை. நன்றாகவே உள்ளது. இதனால்தான் பிற மாநிலத்தவரும் கூட இங்கு வர ஆசைப்படுகின்றனர்” என்று கூறினார்.

மேலும் படிக்க