• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க அடையாள அட்டை – ரசிகர் மன்றம் அறிவிப்பு

May 13, 2017 தண்டோரா குழு

ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க அடையாள அட்டை வேண்டும் என்று ரஜினி ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திபார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதுக்குறித்து விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த் சுமார் 2000 பேர் வரை சந்தித்து புகைப்படம் எடுக்கவிருந்தாகவும், ஆனால் அது சாத்தியமில்லை என்று தோன்றியதால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அதனால் மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்தித்து புகைப்படம் எடுக்க ஏற்பாடும் செய்யப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் புதிதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மண்டபத்திற்குள் கண்டிப்பாக அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க