• Download mobile app
20 Apr 2026, MondayEdition - 3722
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி குறித்து அவதூறு: வாட்ஸ்ஆப் அட்மின் கைது !

May 3, 2017 தண்டோரா குழு

பிரதமர் மோடியை விமர்சித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிடப்பட்டது தொடர்பாக வாட்ஸ் ஆப் குழு அட்மின் மற்றும் உறுப்பினரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்டவைகளில் அதிகப்படியான தகவல்களும், செய்திகளும் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பலர் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் மீம் கிரியேட்டர்ஸ் எனப்படுவோர் அரசியல் தலைவர்களையும், பிரபலங்களையும் கேலியாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கர்நாடகாவில், உத்தர கன்னடா மாவட்டம், டோடாபாஸ்லே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணா சனதாமா என்பவர் “த பாஸ் பாய்ஸ்” என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் அப்பகுதியை சேர்ந்த, 40 பேரை உறுப்பினர்களாக இணைத்துள்ளார். அதில், சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி குறித்து மோசமான வாசகங்களுடன், மோடியின் படத்தை தவறான சித்தரித்தும் தகவல்கள் வெளியிடபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதே குழுவை சேர்ந்த ஆனந்த் மஞ்சுநாத் நாயக் என்பவர் அளித்த புகாரின் பேரில் முருதேஸ்வர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் பந்த், இது குறித்து வழக்கு பதிவு செய்து, வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர் பாலகிருஷ்ண நாயக், குழு அட்மின் கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தார்.

இதில், உறுப்பினர் பாலகிருஷ்ணா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குழு அட்மின் நீதிமன்ற காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க