• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மைசூர் – பெங்களூருக்கு இடையே புதிய ரயில் சேவை

May 4, 2017 தண்டோரா குழு

மைசூர் – பெங்களுருக்கு இடையே மே 13-ம் தேதி முதல் மைசூர்-ஹுப்பாளி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதுக்குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ மைசூர் நகரிலிருந்து பெங்களூர் செல்ல ரயில் சேவை அமைக்க வேண்டும் என்று மக்கள் அதிக எதிர்ப்பார்ப்போடு இருந்தனர். அவர்களுடைய எதிர்ப்பார்ப்பு இந்த புதிய ரயில் சேவை மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் மைசூர் நகரிலுள்ள அசோகபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஹுப்பாளி ரயில்நிலையம் வரை இயங்கும். இது மைசூர் ரயில்நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் நகரின் கிரந்திவீரே சங்கொளி ராயனா ரயில் நிலையத்தை காலை 8.45 மணிக்கு வந்து சேரும்.” என்றார்.

ஒவ்வொரு நாளும் மைசூரிலிருந்து பெங்களூர் நகரத்திற்கு சுமார் 15,௦௦௦ மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். புதிய ரயிலுக்கான கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த புதிய ரயில் சேவையை, மைசூர் கோடாகு எம்.பி. பிரதாப் சின்ஹா மே 13-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவங்களில் பணிபுரியும் மக்கள் கூடுதலான ரயில் சேவை தேவைப்படுகிறது என்று ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க