March 19, 2020
ஸ்வீடன் நாடு சென்று திரும்பிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தம்பதியானர்க்கு சளி இருமல் மூச்சு திணறல் இருப்பதால் கோவை அரசு மருத்துவமனையில் கொரனா வார்டில் கனகாணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
கொரனா வைரஸ் காரணமாக கோவையில் 232 பேர் கண்காணிப்பிலும்,45 பேர் வெளிநாட்டினர் மற்றும் 187 பேர் வெளிநாடு சென்று கோவை திரும்பியவர்கள் என கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இன்று ஸ்வீடன் சென்று விட்டு டெல்லி வழியாக சொந்த ஊருக்கு திரும்பிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தம்பதியருக்கு சளி காய்ச்சல் மூச்சுத் திணறல் இருப்பதால் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.