• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேகாலயா ஆயில் டேங்கர் வெடித்ததில் 3 பேர் பலி

March 14, 2017 தண்டோரா குழு

அசாம் மாநிலத்திலிருந்து மேகாலயா வழியாக மணிப்பூர் சென்று கொண்டிருந்த எண்ணெய் லாரி திடீரென்று கவிழ்ந்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “மேகாலயா மாநிலத்தின் ரி போய் மாவட்டத்தில் எண்ணெய் டேங்கர் லாரி செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

அந்த எண்ணெய் ஏற்றிக் கொண்ட லாரி அசாம் தலைநகரான குவாஹட்டியிலிருந்து மணிப்பூர் சென்று கொண்டிருந்தது.மேகலயா ஷில்லாங் அருகே, அந்த லாரியின் ஓட்டுநர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனால், அந்த லாரி கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியிலிருந்து கசிந்த எண்ணெய் திடீரென்று தீப்பிடித்து, லாரியில் ஏற்றி வரப்பட்ட எண்ணெய் டாங்க் வெடித்தது.அதில், லாரியில் இருந்த மூவரும் இறந்தனர். அவர்களுடைய அடையாளம் இன்னும் தெரியவில்லை. இறந்த 3 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளன

மேலும் படிக்க