June 5, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா, விஐ பயணர்களுக்கு மெட்டா தளங்களான வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பயனர்களுக்குப் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் கடவுச்சொல் தேவையில்லாத டிஜிட்டல் அனுபவங்களைப் பெற உதவுகின்ற விஐ பயனர்களுக்கான சைலன்ட் மொபைல் வெரிஃபிகேஷன் திறன்களின் அறிமுகத்தை அறிவித்தது.
எஸ்எம்வி என்பது பயனர் கைமுறையாகச் சரிபார்ப்பு விவரங்களை உள்ளிடுதல், ஆப்களுக்கிடையே மாறுதல், அல்லது சரிபார்ப்பு செய்திகளுக்காகக் காத்திருத்தல் ஆகியவற்றிற்கு அவசியமற்ற வகையில், பின்னணியிலேயே பயனரின் மொபைல் எண்ணைச் சரிபார்க்கும் ஒரு பாதுகாப்பான, நெட்வொர்க் அடிப்படையிலான அங்கீகார தொழில்நுட்பமாகும். ஒரு விஐ பயனர் விஐ மொபைல் நெட்வொர்க்கில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை அணுகும்போது, சரிபார்ப்பு கோரிக்கையானது, வேகமான மற்றும் இடைத்தடையற்ற அனுபவத்தை வழங்குகின்ற தொலைத்தொடர்பு நெட்வொர்க் மூலமே உறுதிப்படுத்தப்படுகிறது.
புதிய பயனர் பதிவு,மொபைல் எண் சரிபார்ப்பு,உள்நுழைவு மற்றும் மறு உள்நுழைவு,கணக்கு மீட்பு, மற்றும் பாதுகாப்புச் சோதனைகளின் போது அங்கீகாரம் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் எஸ்எம்வி -ஆதரவு செயல்முறைகளை விஐ பயனர்கள் அனுபவிக்க முடியும். இது விரைவான பயனர் இணைப்பு, குறைந்த கைமுறை வழிமுறைகள், மற்றும் ஃபிஷிங் மற்றும் டிஜிட்டல் அடையாள அபாயங்களுக்கு எதிரான மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது.இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலமைப்பு, மோசடி தடுப்பு மற்றும் நம்பகமான அங்கீகாரத்திற்காக, சூழலமைப்பு பங்குதாரர்கள் மற்றும் அரசு தலைமையிலான முயற்சிகளின் அதிகரித்த கவனத்தை கண்டு வருகிறது.
நெட்வொர்க் அடிப்படையிலான சரிபார்ப்பு தொழில்நுட்பங்களான எஸ்எம்வி போன்றவை, டிஜிட்டல் சேவைகளில் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான முக்கிய இயக்கிகளாக உருவெடுத்து வருகின்றன.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிஜித் கிஷோர் கூறுகையில்,
“பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவங்களைச் சாத்தியமாக்குவதில் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் பெருகிய முறையில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கோடிக்கணக்கான நுகர்வோர் ஒவ்வொரு நாளும் விஐ யின் பாதுகாப்பான தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை நம்பியிருப்பதால், இந்த அனுபவங்களை ஒரு பெரும் அளவில் நாங்கள் உருவாக்க முடியும். மெட்டா உடனான எங்கள் கூட்டாண்மை மூலம், நாட்டின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தளங்கள் சிலவற்றில் பயனர்களுக்குத் தடையற்ற அங்கீகார அனுபவங்களை உருவாக்குகின்ற அதே வேளையில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி, மோசடி அபாயங்களைக் குறைக்கின்ற எஸ்எம்வி திறன்களை நாங்கள் செயல்படுத்துகிறோம்.” என்றார்.