• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூலப்பொருட்கள் விலை உயர்வு – கொடிசியா அலுவலகத்தில் தொழில் அமைப்புகள் ஆலோசனை

December 18, 2020 தண்டோரா குழு

கோவை கொடிசியா நகர அலுவலகத்தில் தொழில் அமைப்புகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொடிசியா, சீமா, டாக்ட், டாப்மா, காட்மா, கோப்மா, காஸ்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய உருக்கு துறை அமைச்சரை நேரில் சந்தித்து மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் செயில், விசாக், ஜிண்டால் போன்ற நிறுவனங்களிடம் இருந்து மூலப்பொருட்களை நேரடியாக
பெறும் வகையில் இங்குள்ள தொழில் அமைப்புகள் பங்கு பெறும் ஒரு
கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். கோவையில் சிட்கோ மற்றும் என்எஸ்சி மூலம் முன்னுரிமை அடிப்படையில் மூலப்பொருட்களை வழங்குதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும். என்.எஸ்.ஜ.சி.யின் நிதியுதவி பெற வங்கி உத்திரவாதம் அளித்தல் வேண்டும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது :

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகளை அரசிடம் வேண்டுகோளாய் வைப்பது என முடிவு
செய்யப்பட்டது. உற்பத்தி சார்ந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தேவையான ஸ்டீல் மற்றும்அது சார்ந்த மூலப்பொருட்கள் இந்தியாவில் எளிதில் கிடைக்கும் வகையில் இறக்குமதி வரியை குறைத்து இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.

மூலப்பொருட்களின் விற்பனை விலையை உறுதி செய்வதற்கு அதிகபட்ச விலையை
நிர்ணயம் செய்ய வேண்டும்.இந்த மூலப்பொருள் பற்றாக்குறை சிக்கலை சமாளிக்கும் வகையில் கோவையில் உள்ள செயில் விற்பனை வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க