March 27, 2026
தண்டோரா குழு
இண்டஸ்இண்ட் பேங்க், கேப்பிடல் கெய்ன்ஸ் அக்கௌன்ட் ஸ்கீம் திட்டத்தின் அறிமுகத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் நீண்டகால மூலதன ஆதாயங்களை மறு முதலீடு செய்யும் வரை வைத்திருக்கலாம், மேலும் வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகளின்படி வரி விலக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம்.விதிக்கப்பட்ட சட்டக் கால வரம்புகளுக்குள், நன்கு தகவலறிந்த மறு முதலீட்டு முடிவுகளை எடுக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கின்ற வகையில், பயன்படுத்தப்படாத மூலதன ஆதாயங்களை வைத்திருப்பதற்கு ஒரு பாதுகாப்பான, சட்டத்திற்கு இணக்கமான வசதியை இத்திட்டம் வழங்குகிறது.
இந்த கேப்பிடல் கெய்ன்ஸ் அக்கௌன்ட் ஸ்கீம் திட்டம், 1988-ன் கீழ் வைப்புகளை ஏற்றுக்கொள்ள இண்டஸ்இண்ட் பேங்கிற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்தே இந்த அறிமுகம் வெளியிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், குடியிருப்பு சொத்துக்கள்,அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள், விவசாய நிலங்கள், நகர்ப்புற நிலங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள நிலங்கள் ஆகியவை அடங்கிய தகுதியான மூலதனச் சொத்துகளின் விற்பனையிலிருந்து கிடைக்கும் பயன்படுத்தப்படாத வருமானத்தை இந்த வங்கி வைப்பாக ஏற்றுக்கொள்ளும்.
இண்டஸ்இண்ட் வங்கி, மூலதன ஆதாய கணக்குத் திட்டத்தின் கீழ் இரண்டு கணக்கு விருப்பங்களை வழங்குகிறது.வகை ஏ–சேமிப்புக் கணக்கு என்பது நெகிழ்வான வைப்பு மற்றும் எடுப்பு வசதியை வழங்குகிறது.இதற்கு குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லை மற்றும் பொருந்தக்கூடிய சேமிப்பு வட்டி வழங்கப்படுகிறது.வகை பி – கால வைப்புக் கணக்கு என்பது நிலையான கால வைப்புகளை வழங்குகிறது.
இதற்கு குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 10,000 ஆகும்,மேலும் மறு முதலீட்டுக் காலக்கெடுவுடன் இசைந்து உயர்ந்த வருமானத்தை வழங்குகிறது.இத்திட்டம், அங்கீகரிக்கப்பட்ட கிராமப்புறம் அல்லாத இண்டஸ்இண்ட் பேங்க் கிளைகளில், தகுதியான வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.தகுதியான வாடிக்கையாளர்களில் குடியுரிமை தனிநபர்கள்,பிரிக்கப்படாத இந்து குடும்பங்கள் தனிநபர் அல்லாத அமைப்புகள் மற்றும் இந்தியர் அல்லாத குடியுரிமையாளர்கள் ஆகியோர் அடங்குவர்.