• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் – மைத்ரிபால சிறிசேனா

March 8, 2017 தண்டோரா குழு

தமிழக மீனவர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தகவல்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்டாவில் “இந்திய பெருங்கடல் ரிம் கழகத்தின்”( IORA) மூன்று நாள் மாநாடு மார்ச் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். அதே போல் இந்த மாநாட்டில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் கலந்து கொண்டார்.

இதனிடையே மாநாட்டின் இறுதி நாள் முடிவில் ஹமீத் அன்சாரி சிறிசேனவை சந்தித்து தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பேசி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

“இலங்கை கடற்படை சார்பில் அப்படி எந்த தாக்குதலும் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படவில்லை. எனினும் இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்று சிறிசேனா, அன்சாரியிடம் தெரிவித்துள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க