February 11, 2019
தண்டோரா குழு
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக தமிழக அரசு கூறியது, மேலும் தமிழக அரசு கேரளா அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடர்ந்தது. தமிழக அரசு தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை எனவும், மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கேரள அரசின் பதிலை ஏற்ற உச்ச நீதிமன்றம் தகவல்களை திரட்ட கேரள அரசுக்கு அனுமதியளித்துள்ளது.