• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முல்லை பெரியாரில் புதிய அணை ஏதும் கட்டவில்லைஉச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமான பத்திரம் தாக்கல்

February 11, 2019 தண்டோரா குழு

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக தமிழக அரசு கூறியது, மேலும் தமிழக அரசு கேரளா அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடர்ந்தது. தமிழக அரசு தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை எனவும், மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கேரள அரசின் பதிலை ஏற்ற உச்ச நீதிமன்றம் தகவல்களை திரட்ட கேரள அரசுக்கு அனுமதியளித்துள்ளது.

மேலும் படிக்க