• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பை கபாடியா அங்காடியில் தீ விபத்து

January 7, 2017 தண்டோரா குழு

மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள கபாடியா அங்காடியில் சனிக்கிழமை (ஜனவரி 7) திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அங்கிருந்த புடவை மற்றும் கோவில் பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

குர்லா அங்காடியில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு இருந்த புடவை மற்றும் கோவில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் நான்கு தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை ஆனால், பல கோடி மதிப்புள்ள புடவைகள் மற்றும் பொருள்கள் நாசமடைந்தன.

இச்சம்பவத்திற்கு குறைந்த மின்னழுத்தம் காரணமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க