• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முத்தலாக் எனும் தீங்கிலிருந்து பெண்களை பாதுகாக்க இஸ்லாமியர்கள் முன் வரவேண்டும் – மோடி

April 29, 2017 தண்டோரா குழு

முத்தலாக் எனும் தீங்கிலிருந்து பெண்களை பாதுகாக்க இஸ்லாமியர்கள் முன் வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் கன்னட கவிஞர் மற்றும் சீர்திருத்தவாதி பசவேஸ்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் முத்தலாக் முறைக்கு எதிராக, நவீனத்திற்கான பாதையை காட்ட வேண்டும். முத்தலாக் எனும் தீங்கிலிருந்து பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சமுதாய மக்கள் முன்வர வேண்டும்என்றும் முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாகவும் மோடி கூறினார்.

மேலும், காலாவதியான நடைமுறைகளை ஒழித்து, புதிய நடைமுறையை இஸ்லாமிய சமூகத்தினர் தொடங்க வேண்டும் என்றும், முத்தலாக் விவகாரத்தை அரசிய‌லாக்க கூடாது என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க