• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீலாது நபி விழா: இஸ்லாமிய மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து

December 12, 2016 தண்டோரா குழு

முகமது நபியின் பிறந்த தினமான மிலாது நபி வாழ்த்துகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபியின் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 13) கொண்டாப்படுகிறது. அவருடைய பிறந்த நாளை மிலாத்-ன்-நபி என்று உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் மிலாத்-ன்-நபி விழாவிற்கு இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் ,நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

உலக சகோதரத்துவம், இரக்கம், கருணை, சகிப்புத்தன்மை மற்றும் நல்வாழ்க்கை ஆகியவற்றை நோக்கி வேலை செய்ய நபிகளின் செய்திகள் நமக்கு ஊக்கத்தை அளிகிறது. இந்த நன்நாளில் நபிகளின் வாழ்கையை மற்றும் கொள்கைகளை நினைவில் கொண்டு மனித சேவைக்கு நம்மை முழுவதுமாக சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

மிலாது நபி வாழ்த்துக்கள். இந்த நாளில் நம்முடைய சமுதாயத்தில் ஒற்றுமை, அமைதி மற்றும் சுபிட்சம் எப்போதும் காணப்படட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க