• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீனவர்கள் விடுதலை குறித்து இலங்கை அரசை மோடி வலியுறுத்த வேண்டும் – மு.க. ஸ்டாலின்

May 5, 2017 தண்டோரா குழு

இலங்கை செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 5 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 134 படகுகளை விடுவிக்க இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை நீண்ட காலமாக பறிமுதல் செய்து வைத்துள்ளது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி இலங்கை அரசு வசம் உள்ள 134 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை அங்கு வலியுறுத்த வேண்டும்,” என்றார்.

இலங்கையில் நடைபெற உள்ள புத்த மத விழாவான “விசாகா” தினத்தை கொண்டாட பிரதமர் மோடிக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த விழாவில் 1௦௦க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க