• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் தில்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார் டிடிவி தினகரன்

April 29, 2017 தண்டோரா குழு

சென்னையில் நடத்தப்பட்ட 3 நாள் விசாரணையை அடுத்து டி.டி.வி.தினகரனுடன் தில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று தில்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தில்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஏப்ரல் 16 -ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை அழைத்து வரப்பட்டார். தினகரனின் மனைவியிடத்திலும், அவரது இல்லம், அலுவலகம் என பல இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். அவரும் சென்னை அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தில்லி போலீசாருக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சென்னையில் நடந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தினகரனுடன் தில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று தில்லி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க