• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் கெத்தாக ஊருக்குள் நுழைந்த சின்னத்தம்பி காட்டுயானை!

January 31, 2019 தண்டோரா குழு

கோவை வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் கிராமப்பகுதியில் நுழைந்தது.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 25ம் தேதி விநாயகன் யானையை பிடித்த அதே இடத்தில் சின்னத்தம்பி யானையை மூன்று முறை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர்,
கலீம், விஜய் ஆகிய கும்கி யானைகளின் உதவியால் அடுத்தகட்டமாக, லாரியில் ஏற்றப்பட்டது. இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு விடப்பட்டது.சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது

இந்நிலையில், காட்டு யானை சின்னத்தம்பி, இன்று காலை பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், அங்கலக்குறிச்சி, ஆழியாறு உள்பட 5 கிராமங்களில் நுழைந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மீண்டும் சின்னதம்பியை வனப்பகுதிக்கு முயன்றனர்.
ஊருக்குள் வந்த காட்டு யானை சின்னத்தம்பி வனத்துறையினர் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர். மேலும் யானையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க