• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு

February 6, 2018 தண்டோரா குழு

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, வரும் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டனக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவாலயத்தில் தொடங்கியது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.  இந்த கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு மற்றும் அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கண்டனக் கூட்டங்கள் நடத்துவது, போராட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்பார்கள் என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க