January 31, 2019
தண்டோரா குழு
மார்ச் 1 முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் இல்லங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்ட விதிகளுக்கு மாறாக அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து முறைகேடான சான்றிதழ்கள் மூலம் விடுதிகள் நடத்த அனுமதி பெறப்படுவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த மதுரை கிளை நீதிபதிகள், சட்ட விதிகளின் படி முறையாக மனுக்களை பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து அதிகாரிகள் பிப்ரவரி 15க்குள்ளும், உரிமம் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பிப்ரவரி 28-க்குள்ளும் முடிவெடுக்க உத்தரவிட்டனர்.
மேலும் மார்ச் 1 முதல் உரிமம் இன்றி விடுதிகள் இயங்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.