டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பாஜகவை தோற்க்கடிக்க, மாயாவதி, அகிலேஷ், மம்தா மற்றும் தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் முர்ஷிதாபாத்தில் அரசு திட்டங்களை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உத்திரபிரதேசத்தில் மாயாவதி மற்றும் அகிலேஷ், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா மற்றும் தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். இதுபோல், டெல்லியில் அக்கட்சியை ஆம் ஆத்மி தோல்வியுறச் செய்யும் மேலும் வரும் 2019 மக்களவை தேர்தலில் பாஜக வென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி நாட்டை அழித்து விடுவார்கள் எனவும் கேஜ்ரிவால் எச்சரித்தார். டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி பாஜகவை தோற்கடிக்கும்” என அவர் தனது நம்பிக்கையை தெரிவித்தார்.
தொழில்துறைக்கான ஆட்டோமேஷன்தொழில்நுட்ப நவீனமயமாக்கலுக்கு புதிய ஸ்மார்ட் தீர்வுகள்: லாரிட்ஸ் நுட்சன் எலக்ட்ரிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் அறிமுகம்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி