• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்; கோவையில் நடந்த திருமணத்தில் ருசிகரம்

February 6, 2020 தண்டோரா குழு

கோவையில் நடந்த திருமணத்தில் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம் வந்தனர்.

குறிச்சி பகுதி இடையர்பாளையத்தை சேர்ந்த விமல்குமார் சந்தனமாரி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு முடித்து அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து இருவரும் ஊர்வலமாக சென்றனர். மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அவ்வழியே வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து மணமக்கள் கூறுகையில்,

“தற்போது நடைபெறக்கூடிய திருமணங்கள் பழைய மரபுகளையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்து நடைபெற்று வருகின்றன. இவைகள் அனைத்தும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் திருமணம் முடிந்த பின்னர் மாட்டு வண்டியில் வந்தோம். இது எங்களுக்கு பழைய பாரம்பரியத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.” என்றனர்

மேலும் படிக்க