• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலேசிய பிரதமரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் – ரஜினி

March 31, 2017 தண்டோரா குழு

மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தார்.

பின்னர் நடிகர் ரஜினி போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு சென்றிருந்த போது மலேசிய அரசு செய்த உதவி மிகப்பெரியது.

அங்கயே பிரதமரை பார்த்து நன்றி சொல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் முடியவில்லை.அவர் இங்க வந்ததால் அவருக்கு அழைப்பு விடுத்தேன்.

என் அழைப்பை ஏற்று அவர் வந்தார்.

அவர் அங்குள்ள தமிழக மக்களுக்கு நிறைய உதவி செய்து வருகிறார். அது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டேன் என்றார்.

மேலும், இலங்கைப்பயணம் குறித்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். மலேசிய தூதராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும்
அரசியல் துளி அளவும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் படிக்க