• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னரே வேளாண் கவுன்சிலிங் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்

September 24, 2022 தண்டோரா குழு

மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னரே வேளாண் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது

தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு வரையறைகளை அரசு வழங்க வேண்டும். அதை வழங்கிய பின்னரே தரவரிசைப்பட்டியல் வெளியிட முடியும். இதுதவிர மருத்துவ கவுன்சிலிங்கிற்கு முன்னர் தரவரிசை வெளியிடப்பட்டு கவுன்சிலிங் நடத்துவதால், ஒரு சில மாணவர்கள் மருத்துவ இடம் கிடைத்ததும் அங்கு சென்று விடுவர். அந்த இடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டியிருக்கும்.

இதைக்கருத்தில் கொண்டு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின்னர் வேளாண் கவுன்சிலிங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். கவுன்சிலிங் துவங்கிய மூன்று வாரத்துக்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கும் அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க