• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய சட்டக் கல்லூரி கோயம்புத்தூர் முன்னாள் மாணவர் மன்றத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா – புதிய அறக்கட்டளை துவக்கம்

September 27, 2025 தண்டோரா குழு

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் பயின்று கோவையில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் புதிய அறக்கட்டளை துவக்க விழா கோவை லட்சுமி மில் பகுதியில் நடைபெற்றது.

இவ்விழாவில் கௌரவ விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்,கோவை நீதிமன்ற முதன்மை நீதிபதி விஜயா,தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் சரவணன், மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், சேலம் மத்திய சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கோயம்புத்தூர் அத்தியாயத்தின் சார்பில் மத்திய சட்ட அறக்கட்டளை துவங்கப்பட்டது.இதனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
மேலும்,விழாவில் 30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் 3 சேர்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வை மூத்த வழக்கறிஞர் பிரபு சங்கர், வழக்கறிஞர்கள் விஸ்வநாதன்,கோபால் சங்கர்,ஸ்ரீஹரி,பிரபு ராம்,இந்திரா, ராமகிருஷ்ணன்,சிவ கணேஷ், கோபால் சங்க,ர் தினேஷ்,அரவிந்த், ராஜேஸ்வரி, பவித்ரா,நேரு,ஸ்வேதா வர்ஷினி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

மேலும் படிக்க