February 1, 2019
தண்டோரா குழு
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் தொலை நோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என்று கோவை மண்டல சி.ஐ.ஐ சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த பட்ஜெட்டில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தியது வரவேற்கதக்கது. இது தொழில் முனைவர்களுக்கு பயன் தரும். சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஜி.எஸ்.டி வரி பதிவு செய்தால் போதும் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது. இது சிறு குறு தொழில் துறையினரின் சுமையை குறைத்ததாகவும் கூறினார்.