• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

March 1, 2018 தண்டோரா குழு

மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். ரவுடிகளை சரண்அடையுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். அப்போது, ரவுடிகள் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

 

மேலும் படிக்க