• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்!

April 3, 2017 தண்டோரா குழு

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2009 ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மதிமுக பொதுச்செயளாளர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில்இன்று விசாரணைக்கான வந்தது. அப்போது , வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் வைகோ ஜாமீனில் செல்ல விருப்பம் இல்லை என்றதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், என்னை யாரும் சிறையில் சந்திக்க வரக்கூடாது, போராட்டம், ஆர்ப்பாட்டம் என எதையும் செய்யக்கூடாது என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் “இனபடுகொலை குறித்து இன்றைய இளைஞர்களுக்கு தெரியாதது வேதனை அளிக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க