• Download mobile app
30 Jan 2026, FridayEdition - 3642
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் குழப்பமடைய வேண்டாம் – இந்திய ரிசர்வ் வங்கி

January 7, 2017 தண்டோரா குழு

பத்து ரூபாய் நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்து, செல்லாது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மக்கள் குழப்பமடைய வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

பழைய ரூ 500,1000 செல்லாது என நவம்பர் 8 ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதை உண்மை என நம்பி, வியாபாரிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பத்து ருபாய் நாணயம் செல்லும். மக்கள் குழப்பமடைய வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:

பத்து ரூபாய் நாணயம் 2009ல் அறிமுகம் ஆனது. அவ்வப்போது, சில மாற்றங்களுடன், அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்து, செல்லாது என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுவரை, போலி நாணயங்கள் எதையும் கண்டறியவில்லை.

இந்த நாணயங்கள், இரு உலோகத்தால், வட்ட வடிவில் உருவாக்கப்பட்டவை. 27 மி.மீ., விட்டம், 7.71 கிராம் எடை உடையவை. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அவை அனைத்தும் செல்லும். பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம்.

இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் படிக்க