• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் – தர்மேந்திர பிரதான்

March 20, 2017 தண்டோரா குழு

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக விவசாயிகள் மற்றும் நெடுவாசல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மக்களவையில் திங்கள்க கிழமை கூறியதாவது;

“நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்களை எந்த அரசு கொண்டு வந்தாலும் அதற்கு முறையான சுற்றுச்சூழல் ஆய்வு நடைபெறும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் பாலைவனமாக மாறும் என்ற கருத்து ஏற்க கூடியதல்ல. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கும் என நெடுவாசல் கிராம மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

நம் நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் தேவை அதிகம் உள்ளது. தற்போதைய சூழலில் 80 சதவீத எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக விவசாயிகள் மற்றும் நெடுவாசல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும்”

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

மேலும் படிக்க