January 12, 2019
தண்டோரா குழு
உத்தரபிரதேசம் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும், புதிருமாக உள்ள சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும், மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. பாஜக-வின் ஆதிக்கத்தை முறியடிக்க அவர்கள் கோர்த்துள்ளனர். இக்கூட்டணி குறித்து கடந்த வாரம் டெல்லியில் அகிலேஷும், மாயாவதியும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், பாராளுமன்றதேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ் வாதி கட்சியும் கூட்டணிவைத்து போட்டியிடுகின்றன.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் டெலியில் கூட்டாக இன்று பேட்டி அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி,
பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ் வாதி கட்சியும் ஏற்கனவே கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு உள்ளன. நாட்டின் நலனுக்கா இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம். எங்களது இந்த கூட்டணியை பார்த்து பாஜக அஞ்சுகிறது. ‘இரு மாபெரும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் மோடி, அமித்ஷாவுக்கு இன்றைய தூக்கம் கலையும்’. ‘நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு அச்சம்’ ஏற்பட்டுள்ளது.மோடி ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எங்களது கூட்டணியில் காங்கிரஸ் இல்லை. எங்கள் கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. கடந்தகால தேர்தல்களில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ் ஓட்டு மாறியது இல்லை. பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. அமேதி, ரேபரேலியில் போட்டியிடவில்லை. மற்ற இரு இடங்கள் மற்ற கட்சிகளுக்காக. என கூறினார்.