• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகாத்மா காந்தி படித்த பள்ளி அருங்காட்சியமாகிறது

May 6, 2017 தண்டோரா குழு

குஜராத்தில் மகாத்மா காந்தி படித்த அல்பிரேட் உயர் நிலை பள்ளி அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளி வெள்ளிக்கிழமை(மே 5) மூடப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்காட் நகரில் அல்பிரேட் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி 1853-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் மகாத்மா காந்தி 188௦-1887-ம் ஆண்டு வரை கல்வி பயின்றுள்ளார். அவர் தனது 18 வது வயதில் பட்டம் பெற்றார். அவர் நினைவாக 1971-ம் ஆண்டு அந்த பள்ளிக்கு ‘மோகன்தாஸ் காந்தி’ மேல்நிலை பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டது.

அவர் படித்த அந்த பள்ளியை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து அந்த பள்ளியை அருங்காட்சியகமாக மாற்ற அப்பள்ளி மூடவேண்டும் என்று ராஜ்காட் மாநகர கார்பொரேசன் கடந்த ஆண்டு மனு ஒன்றை குஜராத் அரசிடம் வழங்கியது. அந்த மனுவை குஜராத் மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அந்த பள்ளியை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“இந்த பள்ளியை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற நிபுணர்களை நியமித்துள்ளோம். இந்த பணிக்கான செலவு சுமார் 1௦ கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை எடுத்துச்சொல்லும் இடமாக இது அமையும்” என்று இது குறித்து ராஜ்காட் மாநகர கார்பொரேசன தலைவர் பி.என்.பணி கூறியுள்ளார்.

“இந்த கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்துக்கொள்ள, அவர்களுக்கு பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கி வருகிறோம்” என்று மாவட்ட கல்வி அதிகாரி, ரேவ் படேல் கூறியுள்ளார்.

மேலும் படிக்க