• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் விடுதிகள் இணையதளத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள ஆட்சியர் அறிவுரை

May 24, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான மகளிர் விடுதிகள் உரிமம் பெறவில்லை என்றால் உரிய சான்றிதழ்களை பெற்று www.tnswp.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட சமூகநலத் துறையில் உரிய பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே உரிமம் பெற்று செயல்பட்டு வரும் விடுதிகள் தங்களது பதிவு உரிமம் புதுப்பித்தலின் போது இந்த இணையதளம் வாயிலாக பதிவு மேற்கொள்ள வேண்டும்.

எனவே கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் இணையதளத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக மாவட்ட சமூகநல அலுவலக தொலைப்பேசி எண்: 0422-2305126ல் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.
___

மேலும் படிக்க