• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

February 6, 2018 தண்டோரா குழு

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க  விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க தமிழக அரசு ரூ.25,000 மானியம் வழங்குகிறது.இந்த மானிய விலை ஸ்கூட்டர்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது.

மேலும்,மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை மிகக் குறைந்த காலக் கட்டத்தில் பெற முடியாத நிலையில், பல பெண்கள் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வலியுறுத்தினர்.

இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்க