January 8, 2020
விலை வாசி உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் எதிரொளி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதிகுள்ளாகினர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி கோவையில் இன்று சாலை மறியல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளாவிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதன் எதிரொளியாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் உக்கடம் பேருந்து நிலையம் வெரிச்சோடி காணப்பட்டது. இதனால் சிறு வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபட்டனர். பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.