• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கு வரும் மார்ச்-24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

March 10, 2020

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்தாண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார்.பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கடந்த பிப்ரவரி – 11ஆம் தேதி வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.கடந்த 25-ம் தேதி காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த நிலையில் தற்போது முதன்முறையாக நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதையடுத்து, வழக்கு மார்ச்-24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க