• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கு வரும் மார்ச்-24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

March 10, 2020

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்தாண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார்.பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கடந்த பிப்ரவரி – 11ஆம் தேதி வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.கடந்த 25-ம் தேதி காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த நிலையில் தற்போது முதன்முறையாக நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதையடுத்து, வழக்கு மார்ச்-24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க