• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொருளாதார உறவுகளை பலபடுத்த ஹமீது அன்சாரி போலாந்து பயணம்

April 27, 2017 தண்டோரா குழு

இருநாடுகளின் பொருளாதார உறவுகளை பலபடுத்தும் வகையில், இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி மூன்று நாள் அரசு பயணமாக போலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஹமீது அன்சாரியுடன் அவருடைய மனைவி சல்மா அன்சாரியும் சென்றுள்ளார். மத்திய சிறு குறு தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், சீதாராம் யெச்சுரி, டி.பி. திரிபாதி, விவேக் தங்கா உள்ளிட்டோரும் போலாந்து சென்றுள்ளனர்.

போலாந்து நாட்டின் பிரதமர் பியட்டா சைட்லோவை, அன்சாரி இன்று சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, சில ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். போலாந்து நாட்டின் குடியரசுத் தலைவர் அன்ட்ராஸ் டுடாவையும் அவர் இன்று சந்திக்க உள்ளார்.

மேலும், போலாந்து நாட்டின் பொருளாதார மேம்பாடு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்திய போலாந்து வணிக மன்றத்தில் அன்சாரி கலந்துக்கொண்டு பேச இருக்கிறார்.

இருநாடுகளின் பொருளாதார உறவுகளை பலபடுத்தும் வகையில், இந்த பயணம் அமைந்துள்ளது. இரு நாடுகளிலிருந்தும் சுமார் 15௦ தொழிலதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

மேலும் போலாந்து தூதர் பிசாரியா ஏற்பாடு செய்துள்ள விசேஷ இரவு உணவு விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் அவருடைய மனைவி சல்மா அன்சாரியும் கலந்துக்கொள்வர்கள் எனவும் அந்த விழாவின் போது, போலந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுவார் என்றும் கருதப்படுகிறது.

மேலும் படிக்க