• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் பாதுகாப்புப் படையின் 82வது பயிற்சி முகாம் தொடங்கியது

May 22, 2017 தண்டோரா குழு

உதகை கேத்தியில் தெற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படையின் 82வது பயிற்சி முகாம் தொடங்கியது.இதில் 130 ரயில்வே பணியாளர்கள் பங்கேற்றனர்.

1962-ம் ஆண்டு இந்தியாவின் மீதான சீன அத்துமீறலின் போது நிறுவப்பட்டது பொதுமக்கள் பாதுகாப்புப் படை. இந்த படைக்கு பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களை பாதுகாப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் அந்நிய தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பது, பொது சொத்துக்களுக்கு சேதம் இல்லாமல் காப்பது போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

மேலும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள உதவுவது போன்ற சேவைகளில் இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே ஒரு முக்கியமான பொது சேவையாக இருப்பதால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள், பயணிகள் ஆகியோரை காப்பதற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படை பணியாற்றி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இப்படையில் தெற்கு ரயில்வே பிரிவுக்கு துணைப் பொதுமேலாளர் தலைமை இயக்குநராக உள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி முகாமை வெவ்வேறு இடங்களில் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதன் 82-வது பயிற்சி முகாமை உதகை கேத்தி ரயில் நிலையைம் பின்புறம் உள்ள சாரணசாரணியர் கட்டிடத்தில் இன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்புப் படை முன்னாள் தலைமை இயக்குநர் இளங்கோவன், பொதுமக்கள் பாதுகாப்புப் படை துணை இயக்குநர், முதுநிலை துணைப் பொதுமேலாளர் முரளி, மற்றும் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

இப்பயிற்சி முகாமிற்கு பொதுமகக்கள் பாதுகாப்புப் படையின் முதுநிலை ஆய்வாளர் பி. ரகுநாதன் பயிற்சியாளராக இருப்பார். தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் இருந்து சுமார் 130 புதிதாக பணியில் சேர்ந்த ரயில்தடப்பராமரிப்புப் பணியாளர்கள் பங்கேற்று, முதலுதவி, தீயணைப்பு மற்றும் இதர மீட்பு நடவடிக்கைகளில் பயிற்சி பெற உள்ளனர்.

மேலும் படிக்க