• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கலுக்கு 17 ஆயிரத்து 693 சிறப்பு பேருந்துகள்

January 7, 2017 தண்டோரா குழு

பொங்கல் திருநாளை முன்னிட்டு 17 ஆயிரத்து 693 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொங்கலை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்கவும் வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் வரும் 11, 12, 13 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் அண்ணா நகர் (மேற்கு), தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 250 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளன.

மேலும், சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்குச் செல்ல தினமும் இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக ஒவ்வொரு நாளும் பேருந்துகள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகள் 11-ம் தேதி 794, 12-ம் தேதி 1,779 , 13-ம் தேதி 1,872 என 3 நாட்களுக்கு மொத்தம் 4,445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து 11,270 பேருந்துகள் இயக்கப்படும்.

மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 11ம் தேதி 991 சிறப்பு பேருந்துகள், 12ம் தேதி 2,291 பேருந்துகள், 13ம் தேதி 3,141 பேருந்துகள் என 3 நாட்களுக்கு 6,423 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதே போன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அவை தினசரி சென்னைக்குப் பிற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டு, வரும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் என இயக்கப்படும்.

பயணிகள் கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில் சென்னையில் மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் (கவுன்ட்டர்கள்) இயங்கும்.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 26, தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூந்தமல்லியில் 1 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும். இந்த சிறப்பு முன் பதிவு கவுன்டர்கள் வரும் 9ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை செயல்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044 – 24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க