• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேஸ்புக்நிறுவனர் 12 ஆண்டுகளுக்கு பிறகு டிகிரி வாங்க போகிறார்

March 8, 2017 தண்டோரா குழு

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகும்பேர், 12 ஆண்டுகளுக்குப் பின், தனது டிகிரி படிப்புக்கான சான்றிதழை வாங்க உள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு ஹார்வர்டு கல்வி நிறுவன மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் இணையதளம் இன்று, மிகப்பெரிய சமூக ஊடகமாக, மாறி உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து, இன்றைக்கு சுமார் 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் நிறுவனரான மார்க் ஜுகும்பேர் இன்றைக்கு, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால், அவர் தனது பட்டப்படிப்பை முழுதாக முடிக்காத நபர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஹார்வர்டு கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான மார்க், 2004ம் ஆண்டு பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதே, ஃபேஸ்புக்கை தொடங்கி, படிப் படியாக, அதன் வளர்ச்சி காரணமாக இன்று உலக பிரபல தொழிலதிபராக மாறிவிட்டார். அதனால், அவரால் படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே ஹார்வர்டு கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், அவரது சாதனையை பாராட்டியும், ஹார்வர்டு கல்வி நிறுவனத்திற்கு மார்க் தேடித்தந்துள்ள புகழை கருத்தில்கொண்டும் அவருக்கு, பட்டப்படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழை தர ஹார்வர்டு நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின்போது, மார்க் அவரது படிப்புக்கான டிகிரியை பெற உள்ளார். மேலும், அந்த விழாவில், சிறப்பு உரை நிகழ்த்தவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க