• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமான ஓட்டியான பேருந்து நடத்துனரின் மகள்

May 3, 2017 தண்டோரா குழு

குஜராத்தில் பேருந்து நடத்துநரின் மகள், இன்னும் சில மாதங்களில் விமான ஓட்ட (பைலட்) உரிமம் பெற உள்ளார்.

குஜராத் மாநிலம் சுரத் நகரில் குஜராத் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துநராக பணி புரிபவர் கண்பத் படேல். இவருடைய மகள் ஐஸ்வர்யா படேல் இன்னும் சில மாதங்களில் பைலட் ஆக உள்ளார்.

ஐஸ்வர்யா படேலுக்கு வயது 21. அவர் சுரத் நகரிலுள்ள சன்ஸ்கார் பாரதி பள்ளியில் படித்தார். 12ஆம் வகுப்பு தேர்வில் 7௦ சதவீதம் மதிப்பெண் பெற்ற அவர் அதை தொடர்ந்து விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தது முதல் இதுவரை நடைபெற்ற தேர்வில் ஒரு முறை கூட தோல்வியடையாமல் வெற்றி பெற்று வருகிறார். இன்னும் சில மாதங்களில் விமான ஓட்ட தேவையான பயிற்சிகளை முடித்து பைலட் ஆக உள்ளார்.

இது குறித்து ஐஸ்வர்யா பேசுகையில்,

“உன்னுடைய கனவுகளை மனம் தளராமல் பின் தொடர் என்று என் தந்தை என்னை எப்போதும் உற்சாகப்படுத்துவார். என்னுடைய விமான பயிற்சி படிப்பிற்கு 25 லட்சம் தேவைப்பட்டது. பேருந்து நடத்துநராக பணியாற்றிய என் தந்தையால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை.

அதனால், குஜராத் மாநிலத்தின் ஜில்லா நியமக் அலுவலகத்தின் உதவியை நாடினோம். அவர்களும் மாநில அரசின் ஒப்புதல் பெற்று எங்களுக்கு 25 லட்சத்தை கல்வி கடனாக தந்தனர். அந்த கடனுக்கு 4 சதவீத வட்டி கட்டினால் போதும் என்று தெரிவித்தனர்.

விமான பயிற்சியில் தோல்வியடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். ஒரு பெரிய வணிக விமானத்தின் தளபதியாக வேண்டும் என்பது தான் என் லட்சியம்” என்றார் அவர் .

மேலும் படிக்க