• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணின் தொண்டையில் சிக்கியிருந்தை மாத்திரை கவரை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

January 18, 2019 தண்டோரா குழு

வட அயர்லாந்தில் கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் ஒருவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு 17 நாட்கள் தொண்டையில் சிக்கியருந்த பிளாஸ்டிக் கவர்
வெளியே எடுத்துள்ளனர்.

வட அயர்லாந்தைச் சேர்ந்த ரெஹீனா (40) என்ற பெண் கடந்த மாதம் வலி நிவாரணி மாத்திரையை ஏதோ ஒரு ஞாபகத்தில் கவரை பிரிக்காமல் கவரோடு சேர்த்து விழுங்கியுள்ளார். இதனையடுத்து மறுநாள் தொண்டையில் லேசாக எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த எரிச்சல் வலியாக மாறியது. வலி தங்காம்மல் மருத்துவமனைக்குச் சென்றுயுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் சாதாரண தொண்டை வலிக்கான மருந்தை கொடுத்தனர்.

ஆனால் தொடர்ந்து ஒரு வாரம் ஆகியும் தொண்டையில் வலி தீராத நிலையில் அவர் மற்றொரு மருத்துமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்க்கலாம் என்று கூறி ஸ்கேன் எடுத்தனர். அப்போது அவர் தொண்டையில் ஏதோ ஒரு பொருள் ஒன்று சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஸ்கேநில் கவர் பிரிக்கபடாத 4 மாத்திரையை சுமார் 17 நாட்களாக தொண்டையில் சிக்கயும் அவர் உயிர் வாழ்ந்துள்ளார்.

இதையடுத்து ரெஹீனாவுக்கு அவசர சிகிச்சையளித்து மருத்துவர்கள் அவர் தொடையில் இருந்த மாத்திரை கவரை 17 நாட்ககளுக்கு பின்பு வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

மேலும் படிக்க