• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்ற வினோதம்

July 10, 2017 தண்டோரா குழு

பிரிட்டன் நாட்டில் ஆண் ஒருவர் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரிட்டன் நாட்டின் பெண்ணாக பிறந்த பேஜ், இளம் வயதில் அவருடைய உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாறுதல் காரணமாக, தான் ஒரு ஆண் என்று உணர்ந்தார். முழு ஆணாக மாறும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், தன்னுடைய கருப்பையை அகற்ற மறுத்துவிட்டார். தன்னுடைய பெயரை ஹய்டேன் கிராஸ்(21) என்று மாற்றிக்கொண்டார்.

எதிர்காலத்தில் தனக்கு குழந்தை வேண்டும் என்பதால், தன்னுடைய கருமுட்டைகளை, அதற்கான வங்கியில் சேமிக்க முடிவு செய்தார். ஆனால் தேசிய சுகாதார அமைப்பு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, இணையதளமான பேஸ்புக் மூலம், ஆண் விந்தை நன்கொடை செய்யும் ஒருவரை கண்டுபிடித்தார். பின்னர் அந்த விந்தணு அவருடைய கருவில் செலுத்தப்பட்டது. இதனால் அவர் கர்ப்பம் அடைந்து, குளூசெஸ்ட்டர்ஷைர் ராயல் மருத்துவமனையில் கடந்த ஜூன் 16 ஒரு அழகிய பெண் குழந்தையை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார்.

மேலும் படிக்க