• Download mobile app
22 Apr 2026, WednesdayEdition - 3724
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

February 3, 2017 தண்டோரா குழு

பெங்களூர் புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காரில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பெங்களூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெங்களூர் நகரில் வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டியின் (APMC) தலைவர் கே. ஸ்ரீநிவாஸா. அவர் சம்பவத்தின் போது பயணித்த ஹோண்டா சிட்டி கார் போக்குவரத்து சிக்னலில் காத்து நின்றபோது, மோட்டார் வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் அந்த காரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த ஸ்ரீநிவாஸாவையும் அவருடைய கார் ஓட்டுநரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2௦13-ம் ஆண்டு கொலை மற்றும் தொடர் குற்றங்களுக்காக ஸ்ரீநிவாஸா கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க