• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புழல் சிறையில் வேந்தர் மூவீஸ் மதனிடம் ரூ.15ஆயிரம் பறிமுதல்

March 13, 2017 தண்டோரா குழு

சென்னை புழல் சிறையில் உள்ள வேந்தர் மூவீஸ் எஸ்பி மதனிடமிருந்து 15,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார் எழுந்தது. அதையடுத்து, பல நாட்களாகத் தலைமறைவாக இருந்த மதனை காவல் துறையினர் கடந்த நவம்பர் மாதம் திருப்பூரில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கைதிகளிடம் அதிக அளவு பணம் புழங்குவதாகச் சிறையின் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறையில் உள்ள அறைகளைக் காவலர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது மதன் அறையில் ரூ. 15 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க