• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் நடைபெற்ற தவக்கால இரத்த தான முகாம்

February 22, 2026 தண்டோரா குழு

கோவை லாலி ரோடு புனித வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய தவக்கால இரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

கோவை லாலி ரோடு புனித அருளானந்தர் ஆலயத்தின் கிளை சபையான புனித வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கோவை அரசு மருத்துவ இணைந்து தவக்கால இரத்த தான முகாம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக இரத்த தான முகாமை ஆலயத்தின் பங்குதந்தை அருட்பணி ததேயூஸ் பால்ராஜ் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில்,அருட் சகோதரிகள் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி நவீன் ரோசாரியோ,மற்றும் புனித வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் ராஜேஷ்,உதவி தலைவர் பிரதாப், செயலாளர் சுகுணா மேரி, பொருளாளர் அருள்ராஜ்,உதவி செயலாளர் சகாயமுத்து, மற்றும் மூத்த உறுப்பினர்கள் சாமுவேல் ராஜ், ரவி ஆல்பிரெட் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து புனித வின்சென்ட் தே பவுல் சபையின் செயல்பாடுகள் குறித்து அருட்பணி பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில்,

கடந்த பல ஆண்டுகளாக இந்த சபையின் வாயிலாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறோம்.குறிப்பாக போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் சுமார் 30 குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம்.மேலும்,கடந்த ஆண்டு 5 லட்ச ரூபாய் மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற தவக்கால இரத்ததான முகாமில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் இரத்த தானம் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் இரத்த தானம் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க