• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீட்டாவின் டார்ச்சரால் நிறுத்தப்பட்ட சர்கஸ் கம்பெனி !

May 22, 2017 தண்டோரா குழு

பீட்டா அமைப்பின் நெருக்கடியால், 146 ஆண்டுகளாக சர்க்கஸ் பணியை தொடந்து வந்த ‘ரிங்க்ளிங் சர்கஸ்’ தனது கடைசி நிகழ்ச்சியை மே 21-ம் தேதி நடத்தி விடைப்பெற்றது.

அமெரிக்காவில் இயங்கி வரும் ரிங்க்ளிங் சர்க்கஸ் நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. யானைகளைக் கொண்டு பல சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததால், அதுவே அந்த சர்கஸ் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக விளங்கியது.

இந்நிலையில் யானைகளை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பீட்டா அமைப்பினர் அவர்களை வற்புறுத்தினர்.

இந்நிலையில் யானைகள் இல்லாமல் இனி அதனை தொடர முடியாது என்பதால், சர்க்கஸ் நிகழ்ச்சியை மூட போவதாக கடந்த ஜனவரி மாதமே அந்நிறுவனம் அறிவித்தது.

விலங்குகளை கொண்டு நடத்தப்படும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பீட்டா அமைப்பினர் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இருப்பினும், சிங்கம், புலி, குதிரை, நாய், ஒட்டகம் ஆகியவற்றைக் கொண்டு ரிங்க்ளிங் சர்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பீட்டா அமைப்பின் நெருக்கடியால் அந்த சர்க்கஸ் நிறுவனம் கடந்த 21-ம் தேதி மூடப்பட்டது.

“விலங்குகளை எவ்வகையிலும் துன்புறுத்தவில்லை, அவைகளை மனிதர்களைப்போல் தான் நடத்தி வருகிறோம்” என்று ரிங்க்ளிங் சர்க்கஸ் நிறுவனம் தெரிவித்தது.

“எங்களுடைய குதிரைகள், நாய்கள், 317 எடையை உடைய இரண்டு திறமை நிறைந்த பன்றி ஆகியவற்றை பார்ப்பதில் மக்களுக்கு அதிக விருப்பம்” என்று அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

சர்க்கஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி, கென்னெத் பெல்ட் கூறுகையில்,

“இதன் கடைசி நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தை கண்டு எங்கள் உள்ளம் நெகிழ்ச்சி அடைந்தது. ரிங்க்ளிங் வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பட்டது. ரிங்க்ளிங் சர்க்கஸ் நிகழ்ச்சியை 25௦ மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க