• Download mobile app
10 Sep 2026, ThursdayEdition - 3865
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் வெள்ளி விழா நிறைவு

September 10, 2026 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி சன்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கீழ் இயங்கி வரும் பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா கோவையில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு பி.எஸ்.ஜி சன்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வே.சங்கர் வரவேற்புரை வழங்கினார்.

ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ மருந்தியல் மற்றும் மொழிபெயர்ப்பு மருத்துவம், மருந்து மேம்பாட்டு அறிவியல் துறை இயக்குநர் முனைவர் சுப்பிரமணியன் கணேசசுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில்,பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 25 ஆண்டுகாலப் பயணத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் நினைவுகளை உள்ளடக்கிய வெள்ளி விழா நினைவு மலர் வெளியிடப்பட்டது.

மேலும்,கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களித்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.மாணவர்களின் திறமை மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, சமூகச் செயல்பாடுகள் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் முனைவர் மு. ராமநாதன் நன்றியுரை வழங்கினார்.ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் 25 ஆண்டுகால பங்களிப்புகளையும் சாதனைகளையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிறைவு விழா, பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

மேலும் படிக்க