September 9, 2026
தண்டோரா குழு
கோவையில் முதல்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கோவை மாருதி சுசுகி டீலர்களான அம்பாள் ஆட்டோ, ஏபிடி, ஆதி மாருதி மற்றும் ஜெய்கிருஷ்ணா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாருதி சுசுகியின் கோவை ஏரியா மேனேஜர் தேவான்சு மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாடிக்கையாளர்களுக்கு கார் சாவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அம்பாள் ஆட்டோ நிர்வாக இயக்குநர் அனீஷ், ஆதி மாருதி நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், ஜெய்கிருஷ்ணா நிர்வாக இயக்குநர் பிரவீன் மற்றும் ஏபிடி சிஓஓ மது பண்ணாங் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், புதிய கார்களை டெலிவரி பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து தேவான்சு மான் கூறியதாவது:
“கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV வாகனங்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான மைல்கல்லாகும்.
புதிய பிரெஸ்ஸா மற்றும் மிட்-SUV பிரிவில் உள்ள விக்டோரிஸ் ஆகிய மாடல்களுக்கு கோயம்புத்தூர் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. SUV பிரிவில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைப்போம்,” என்றார்.
மாருதி சுசுகியின் டெரிட்டரி மேனேஜர் சாம் கூறியதாவது:
“கோயம்புத்தூரில் முதல்முறையாக இந்தப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட SUV கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்துள்ளோம். கோயம்புத்தூர் சந்தையில் SUV வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சந்தையில் விற்பனையாகும் வாகனங்களில் சுமார் 50 சதவீதம் SUV பிரிவைச் சேர்ந்தவை.
மாருதி சுசுகியின் விக்டோரிஸ் மற்றும் பிரெஸ்ஸா மாடல்கள் கோயம்புத்தூர் சந்தையில் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாருதி சுசுகி டெரிட்டரி மேலாளர்கள் சாம், ரோஹித் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.